ஆந்திர பிரதேசத்தில் சைபர் குற்றங்களை பதிவு செய்யும் பணியில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள மகாராணிபேட்டா காவல் நிலையத்தில் சைபர் குற்றப் புகார்களைப் பதிவு செய்வதற்காக ரோபோ போலீஸ் ஒன்று புதியதாக நிறுவப்பட்டுள்ளது. இந்த ரோபோ உடனுக்குடன் புகார்களைப் பதிவு செய்துகொள்வதோடு உடனுக்குடன் தீர்வு காணும்பொருட்டு தொடர்புடைய அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்துவிடுகிறது. யார் வேண்டுமானாலும் ரோபோவை அணுகி சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம். அவற்றிற்கு உடனுக்குடன் தீர்வுக் காணப்படும் என்று விசாகப்பட்டினம் போலீஸார் தெரிவித்தனர். காவல் நிலையத்தின் வாசலில் ரோபோ நிறுத்திவைக்கப்பட்ட ரோபோ சிபிரா நாம் வணக்கம் வைத்தால் அதுவும் வணக்கம் வைக்கும். இந்த ரோபோ ஒரே இடத்தில் நிற்காமல் தேவைக்கேற்ற இடங்களுக்கு நகர்ந்து செல்லும். அதன் மார்பிலுள்ள மானிட்டரில் நமது புகார்களைப் பதிவு செய்யலாம் என அதன் வழிகாட்டி தெரிவித்துள்ளார்.